தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 26000த்தை கடந்தது. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, July 28, 2021

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 26000த்தை கடந்தது.



தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி இன்று புதியதாக 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 41 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள், உயிரிழப்பு 0.

இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 26,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 25,432 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 233 பேர் உயிரிழந்துள்ளனர், 353 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மாவட்டத்தில் மொத்தம் 197 சாதாரண படுகைகளில் 177 சாதாரண படுக்கைகளும், மொத்தம் 223 ஆக்ஸிஜன் படுகைகளில் 168 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 126 தீவிர சிகிச்சை பிரிவு படுகைகளில் 85 ICU படுக்கைகளும் காலியாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் அரசு விவரங்கள் வெளியிட்டுள்ளது.  

No comments:

Post a Comment