கடந்த 25ம் தேதி கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 12,500 கனஅடி உபரி நீர் இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர்வரத்து வந்து சேர்ந்தது.
கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி கடந்த 25ம் தேதி தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 12,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 8,400 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 4,100 கன அடி நீர் என மொத்தம் விநாடிக்கு 12,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டன.
இந்த நீர் இரண்டு நாட்களுக்குள் தமிழகத்திற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று மாலை நேரத்திலிருந்து தமிழக எல்லையான பிலிகுண்டுவில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி தற்போது விநாடிக்கு 14,000 கனஅடியாக உள்ளது, இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.
No comments:
Post a Comment