தருமபுரி மாவட்டத்தில் 3-வது கொரானா அலை தொற்று பரவலை தடுக்க ஆடி பதினெட்டு நாளில் பக்தர்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் மாவட்ட ஆட்சியர் திருமதி. ச. திவ்யதர்ஷினி அவர்கள் ஆகஸ்ட் 1 தேதி முதல் 3 தேதி வரை கோயில்களில் பக்தர்கள் செல்வதற்கு தடை விதித்து அறிக்கை வெளியிட்டார்.
மேலும் கோயில்களில் வருடம் தோறும் ஐதீக முறைப்படி நடைபெறும் பூஜையை கோயில் அலுவலர்கள் மட்டுமே நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆடி பதினெட்டில் பக்தர்கள் இற்றி வெறிச்சோடி இந்த கோயில் காணப்பட்டது. செல்லம்மாள் தேவி ஆலயத்தில் கோவில் நிர்வாகத்தின் மூலம் சாமி அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதே போன்று தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்திலும் நடைபெற்றது ஆனாலும் பக்தர்கள் சாலையோரத்தில் நின்று கர்ப்பூரம் ஏற்றி தீர்த்தகிரி மலையை பார்த்து சாலையோரங்களில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்து வணங்கி சென்றனர்.


No comments:
Post a Comment