பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கோரிக்கை அட்டை அணியும் போராட்டம்.
மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி 11 சதவீதத்தை தமிழ்நாடு மாநில அரசு நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய நிதியமைச்சர், இதனை நிலுவையில் வைத்துக்கொள்ளுங்கள் அடுத்த ஆண்டு தருவதாக கூறிய நிலையில் அரசு ஊழியர் சங்கத்தின் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாத காரணத்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.
அதன் படி இன்று மாநிலம் முழுவதும் அனைத்து அரசு ஊழியர்களும் கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக இன்று தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு மருத்துவர் சக்திவேல் தலைமையில் கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் நடைபெற்றது.இதில் மாநில அரசு ஊழியர் சங்க தலைவி தமிழ்ச்செல்வி, சுகாதாரத்துறை மாவட்ட செயலாளர் தேன்மொழி மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment