தர்மபுரி கடைவீதி பகுதியில் ஸ்ரீ புத்திகே மடத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோயிலில் ஆராதனை விழா நடைபெற்றது.
தர்மபுரி கடைவீதி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ புத்திகே மடம் ஸ்ரீ ராகவேந்திரா கோயிலில் 350வது மகா உத்சவ ஆராதனை விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
தர்மபுரி விருப்பாட்சிபுரம், உடுப்பி ஸ்ரீ புத்திகே மடத்தில் ஸ்ரீ ராகேவேந்திர சுவாமியின் 350வது ஆண்டு ஆராதனை மகோத்சவ விழா கடந்த 21ம் தேதி துவங்கியது. 23ம் தேதி ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு பூர்வ ஆராதனை நடந்தது. விழாவின் முக்கிய நாளான 24ம் தேதி ஸ்ரீராகவேந்திரர் சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்று காலை 12.30 மணிக்கு கனக பூஜை பக்தர்களால் நடந்தது. இதையடுத்து ஸ்ரீ ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது
No comments:
Post a Comment