பொம்மிடி இரட்டை கொலை வழக்கில் 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, August 26, 2021

பொம்மிடி இரட்டை கொலை வழக்கில் 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தம்பதியர் கொலை வழக்கில் 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகேயுள்ள பில்பருத்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(80), இவருடைய மனைவி சுலோச்சனா(75) ஓய்வுபெற்ற ஆசிரியை, இவர்களை கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் படுகொலை செய்தனர். இந்த இரட்டை கொலை சம்பந்தமாக பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பில்பருத்தி பகுதியை சேர்ந்த வேலவன்(24), பிரகாஷ்ராஜ் (19), முகேஷ் (19), ஹரிஷ் (20), சந்துரு (22) எழிலரசன் (26) ஆகிய 6 பேர் வயதான தம்பதியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வயதான தம்பதி கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் பிரகாஷ்ராஜ், முகேஷ், ஹரிஷ் ஆகிய 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்க தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன்.இ.கா.ப., அவர்கள் பரிந்துரைத்ததின்பேரில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.திவ்யதர்ஷனி.இ.ஆ.ப., அவர்களால் உத்தரவிடப்பட்டு ஆணை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment