நான்கு நாட்டு கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, August 26, 2021

நான்கு நாட்டு கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல்.

கரகூர் கபாலி மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேம்பாலத்திற்கு கீழ் நான்கு நாட்டு கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி கிராமப் பகுதியில் பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் தினகரன் தலைமையில் பஞ்சப்பள்ளி காவலர்களுடன் மலைப் பகுதி கிராமங்களுக்கு சென்று கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் தினகரன்  பொதுமக்களுக்கு கூறியதாவது நாட்டு கள்ளத்துப்பாக்கி ஏதாவது வைத்திருந்தால் நீங்களாகவே அருகிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார். 

அப்படி கிராமத்தில் யாராவது நாட்டு கள்ளத்துப்பாக்கி வைத்திருந்து ஒப்படைக்க வில்லை என்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இதையடுத்து நேற்று கரகூர் கபாலி மாரியம்மன் கோவில் அருகே உள்ள பாலத்திற்கு கீழ்  நான்கு நாட்டு கள்ளத் துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது ரகசிய தகவல் மூலம் பஞ்சப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது தகவலின் பெயரில் அங்கு விரைந்து சென்ற பஞ்சப்பள்ளி காவலர்கள் எஸ் எஸ் ஐ.ரவிச்சந்திரன்,நாகராஜ் மற்றும் மாரண்டஅள்ளி காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் அந்த நான்கு நாட்டு கள்ளத் துப்பாக்கிகளை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment