ராகி, சாமை, துவரை, மக்காசோளம் மற்றும் பருத்தி பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, August 24, 2021

ராகி, சாமை, துவரை, மக்காசோளம் மற்றும் பருத்தி பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் தங்களது நடப்பாண்டு கோடை பருவத்தில் ராகி, சாமை, துவரை, மக்காசோளம் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களுக்கு 31.08.2021 வரை காப்பீடு செய்து பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

தருமபுரி மாவட்டத்தில் ராகி, சாமை, துவரை, மக்காசோளம் மற்றும் பருத்தி பயிர்களை காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும் நிலையான வருமானம் கிடைக்கவும் விவசாயத்தில் நிலை பெற செய்யவும். திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு கோடை பருவத்தில் ராகி, சாமை, துவரை, மக்காசோளம் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களுக்கு வரும் 31.08.2021-ம் தேதி வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய மக்காச்சோளத்திற்கு ஒரு எக்கருக்கு ரூ-450/- சாமைக்கு ரூ.120/- இராகிக்கு ரூ196/- துவரைக்கு ரூ.266/ மற்றும் பருத்திக்கு ரூ. 590/- விவசாயிகளின் பங்கு தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம்.

அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் (AICIL) என்ற முகமையின் மூலம் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு, காப்பீடு செய்து கொள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் ங்கங்கள், தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை விவசாயிகள் அணுகலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அடங்கல், நில உரிமைப்பட்டா, ஆதார் நகல் மற்றும் நடப்பில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்துடன் உரிய பிரிமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் விதைப்புக்கு முன்னரே பயிர் காப்பீடு செய்ய கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து விதைப்புச் சான்று பெற்றும் காப்பீடு செய்யலாம்.

மேலும், விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டும். உழவன் செயலியில் இருந்தும் தகவல்களை பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment