பொதுமக்கள் இன்றி வெறிச்சோடிய ஒகேனக்கல்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் சுற்றுலா தளமானது தற்போது பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது கொரோனா பரவல் காரணமாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல்லுக்கு செல்ல தொடர்ந்து தடை விதித்து வருகிறது இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஒகேனக்கல்லில் படகு சவாரி செய்யும் தொழிலாளர்கள்,மீன்பிடித் தொழிலாளர்கள், மசாஜ் தொழிலாளர்கள், மற்றும் சமையல் செய்யும் தொழிலாளர்கள் என ஏராளமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவருகின்றனர் எனவும் கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகள் கொடுத்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு அங்கே வாழும் வியாபாரிகளும் மற்றும் தொழிலாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment