தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவேரி மருத்துவமனை சார்பில் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த முகாமை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அசோக் லேலண்ட் நிறுவனம் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. மேலும் இந்த முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் சார் ஆட்சியர்.நிஷாந்த் கிருஷ்ணா அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சூளகிரி வட்டாட்சியர் நீலமேகன் மற்றும் வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment